தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி முதல் 7% ஊதிய உயர்வு – உத்தரவு பிறப்பிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி முதல் 7% ஊதிய உயர்வு - உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி முதல் 7% ஊதிய உயர்வு - உத்தரவு பிறப்பிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி முதல் 7% ஊதிய உயர்வு – உத்தரவு பிறப்பிப்பு!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த பின்னர், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் மற்ற படிகளையும் உயர்த்தி வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

சம்பள உயர்வு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து, அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுபட்டுள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிக நிதி செலவிட நேர்ந்தது. இதனால் கடந்த ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்ற பலன்களும் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாநில அரசுகளும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளித்து வருகிறது.

தமிழகத்தில் நாளை (டிச.13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வினை அறிவித்து வந்தது. அந்த வகையில் தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் உள்ள ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகளின் பண்டகசாலையின் செயலர், கணக்கர், எழுத்தர், காசாளர் போன்ற பதவிகளுக்கான அறிவிப்பு புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையின் ஊழியர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு இறுதியாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. 5 ஆண்டுகளாக அடுத்து ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் உள்ளது. இதனால் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்தியாவில் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை!

இதனால் கூட்டுறவு துறையின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிர்ணயம் செய்வதற்கு அரசு சிறப்பு குழுவின் பரிந்துரையின் படி மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை நிர்ணயம் செய்துள்ளனர். அதன்படி, லாபத்தில் இயங்கும் பண்டக சாலை ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வும், இந்த ஆண்டில் தொடர்ந்து அதிக லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு 5% மற்றும், நஷ்டத்தில் இயங்கும் பண்டக சாலைகளுக்கு 3% ஊதிய உயர்வு வரும் 2022 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஊழியர்களுக்கு கூடுதலாக வீட்டு வடக்கை படி, மருத்துவப்படி, பயணப்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்து படி போன்றவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!