தமிழகத்தில் தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு!
அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தொழில் படிப்புகளிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளியில் பயில கூடிய ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத இக்கட்டான சூழலில் உள்ளனர். இந்த கொரோனா ஊரடங்கால் வேலைகளை இழந்து அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகிறோம். இந்த நேரத்தில் குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்கு உதவ முடியவில்லை அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு – ஆகஸ்ட் 31 கடைசி நாள்!
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, கல்வித் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பாடம் கற்பித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அரசு ஆராய்ந்து வருகிறது. அதில் தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவது கண்டறியப்பட்டு அது குறித்த காரணங்களை ஆராய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தொழிற் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்பு களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது. இதன் பிறகு இனி வரும் கல்வியாண்டில் தொழிற் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.