தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற 7 லட்சம் பேர் விண்ணப்பம் – உணவு வழங்கல் துறை!
தமிழகத்தில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில் தற்போது வரை 7 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ரேஷன் கார்டுகள்:
நடந்து முடிந்த தேர்தலில் திமுக அணி 10 வருடங்களுக்கு பிறகு வெற்றி கண்டு ஆட்சி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன் அடிப்படையில் ஏற்கனவே ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம், கொரோனா நிவாரணம் ரூ.4000 உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து ரேஷன் கார்டுகள் பெற பலர் விண்ணப்பித்து வந்தனர். தற்போது அது குறித்த தரவுகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் பேருந்து பயண கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
மே முதல் ஜூலை வரை புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற 7.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதனை தொடர்ந்து மே மாதத்தில் 1.26 லட்சம் பேரும், ஜூனில் 1.57 லட்சம் பேரும், ஜூலை மாதத்தில் 2.61 லட்சம் பேரும், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் 4.52 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு 1.35 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
தேவையான ஆவணங்களுடன் சரியாக பூர்த்தி செய்யப்பட்ட மீதமுள்ள 3.38 லட்சம் விண்ணப்பங்களை அளித்த விண்ணப்பதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தரப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.