பிப்.10 வரை தினசரி 7 மணி நேரம் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
திரிபுரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
திரிபுராவில் சுகாதாரத் துறை அறிக்கைகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நான்கு இறப்புகளுடன் 79 புதிய கோவிட் -19 பாதிப்புகள் மாநிலத்தில் பதிவாகியுள்ளன. சுகாதாரத் துறையின் சமீபத்திய அறிக்கையின் படி முதல் மற்றும் இரண்டாவது டோஸ்கள் உட்பட மொத்தம் 49,41,939 கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன. மாநிலத்தில் மொத்தம் 6,94,640 டோஸ்கள் தற்போது அரசின் கையிருப்பில் உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு மற்றும் நோய் தடுப்பு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது.
1,149 காவலர் & தீயணைப்பு வீரர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! மார்ச் 4 கடைசி நாள்!
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தவிர, மாநில அரசு பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்து முதல் முறையாக பிடிபட்டால் ரூ. 200, மீண்டும் மீண்டும் விதியை மீறினால் ரூ.400 மற்றும் சமூக விலகல் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தும் விதிமுறைகளை மீறியதற்காக 1,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் திங்கள் கிழமை வரை முகக்கவசம் அணியாததற்காக மாநிலம் முழுவதும் விதிமீறல் செய்பவர்களிடம் இருந்து 79,400 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கோவிட்-19 நேர்மறை விகிதம் 10.72 சதவீதமாக இருந்தது. இதனால் இரவு ஊரடங்கு உத்தரவு ஜனவரி 18 முதல் 30 வரை அமலில் இருந்தது. தற்போது நேர்மறை விகிதம் 3.53 சதவீதமாக குறைந்துள்ளது.இதனால் அரசு பல தளர்வுகளையும் அளித்துள்ளது. கோவிட் -19 நோய் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், திரிபுரா அரசு செவ்வாய்க்கிழமை முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நேரத்தையும் பிற கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. அதே நேரத்தில் கோவிட் -19 பொருத்தமான நடத்தையைத் தொடருமாறு பொதுமக்களை வலியுறுத்துகிறது. திருத்தப்பட்ட கோவிட்-19 அறிவிப்பின்படி, பிப்ரவரி 10 வரை இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.
அர்ஜுன் டெண்டுல்கரை தக்க வைத்த மும்பை இந்தியன்ஸ் அணி – ரசிகர்கள் விமர்சனம்!
முன்னதாக, இது இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு வளாகங்கள் 50 சதவீத திறனுடன் அனுமதிக்கப்படுகின்றன. அனைத்து மத இடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் கோவிட்-19 வழிகாட்டுதல்களைப் பின்பற்றி திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன. அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் மற்றும் வீடியோ கான்பரன்சிங் கூட்டங்களில் 100 சதவீத வருகையை அரசு அறிவுறுத்தியுள்ளது. பணியிடங்களை அடிக்கடி சுத்தப்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.