தமிழகத்தில் பள்ளிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? கிறிஸ்துமஸ், புத்தாண்டு எதிரொலி!
தமிழகத்தில் திருப்புதல் தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9 – 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. கடந்த கல்வியாண்டில் கொரோனா அச்சம் காரணமாக 10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி முதல் 7% ஊதிய உயர்வு – உத்தரவு பிறப்பிப்பு!
ஆனால் இந்த வருடம் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் 10,11,12ம் வகுப்புகளுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2021 – 2022 ம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாட சுமையை குறைக்க பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் காலாண்டு தேர்வுக்கு பதில் முதல் திருப்புதல் நடத்தப்பட்டது. இதில் மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆய்வு நடந்தது. இந்த நிலையில் வரும் 17 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் நாளை (டிச.13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த திருப்புதல் தேர்வு டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக புத்தாண்டு வரவுள்ளது. அதனால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முடிந்த பிறகு 2022 ஜனவரி 2ம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது 2022 மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வும் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.