மாநில அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!
நாடு முழுவதும் கொரோனாவால் பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14 நாட்கள் கொரோனா சிறப்பு விடுப்பை 7 நாட்களாக குறைத்து மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில அரசு உத்தரவு:
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளாக மக்களை பாடாய்படுத்தி வருகிறது. கொரோனாவின் இரண்டு அலைகளை சந்தித்த மக்கள் மூன்றாம் அலையை கூட கடந்த மாதம் சந்தித்தனர். ஏகப்பட்ட பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தையும் சொந்தங்களையும் இழந்து இருக்கின்றனர். இத்தகைய மோசமான கொரோனா இன்னும் இருக்க தான் செய்கிறது. அதனால் ஒரு சில கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தி இருக்கிறது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய விடுமுறை – மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு!
கொரோனா மூன்றாம் அலை தாக்கத்தின் போது அரசு ஊழியர்களுக்கு மாநில அரசுகள் 14 நாட்கள் சிறப்பு விடுப்புகளை அறிவித்தது. அதன் படி ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்கி இருக்கிறார். இதன் மூலம் அரசு ஊழியர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள வசதியாக இருந்தது.
பிப்ரவரி 7 முதல் 1 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் மாற்றம் – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில், ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை, கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்குவதற்கான மாற்றியமைத்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 14 நாட்கள் சிறப்பு விடுமுறை, 7 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. 7 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், மருத்துவ சான்றிதழை காண்பித்தால் விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது உடனே அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.