தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை - முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை - முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அரசு ஊழியர்கள் பயன் பெறும் விதமாக பல்வேறு நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியரின் மனைவிக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது அந்த ஊழியருக்கு அதிகபட்சமாக 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு தற்செயல் விடுமுறை:

தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. கடந்த 2 வருடங்களில் நோய் பரவல் காரணமாக விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் மக்களுக்கு இடைவிடாது சேவைகளை வழங்கி வந்தனர். கொரோனா தொற்று அச்சத்திலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றினர். இதன் காரணமாக பெரும்பாலானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்கள் நலன் கருதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

LPG காஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்!

இதையடுத்து வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண் 304 நாள்.17.06.2020-ன் படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலும் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். அதாவது சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் என அனைத்தும் மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுமுறைக்கு அரசு அனுமதி வழங்குகிறது. அதனை தொடர்ந்து தற்போது அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண் அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வகையில் அரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டா என்ற கேள்வி பல்வேறு தரப்பிலிருந்து கேட்கப்பட்டு வருகிறது. அதற்கு அரசாணை நிலை எண்.120, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாள்.20.1.1997 ன் படி அரசு பணியாளரின் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் போது பணியாளருக்கு மருத்துவரின் மருத்துவச் சான்றின் அடிப்படையில் 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு என அரசு அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!