ஜன.3 முதல் 6 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | அறிவிப்புகள் வெளியீடு!
தேசிய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் கடந்த வாரம் முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில பள்ளிகள் ஜனவரி 3 முதல் வகுப்புகளை தொடங்க முடிவு செய்திருக்கிறது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2ம் அலைத்தொற்று ஓய்ந்திருக்கும் சூழலில் மாநிலங்கள் தோறும் பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் மீண்டுமாக துவங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் தேசிய தலைநகர் டெல்லியிலும் கடந்த ஜூலை மாதம் முதலே பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஆனால் டெல்லியில் கடந்த மாதம் முதல் நிலவி வரும் காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளை மூடும்படிக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்தியாவில் வேகமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று – 200ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை!
என்றாலும் பொதுத்தேர்வுகளை எழுதும் CBSE மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து கடந்த வாரத்தில் டெல்லி காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) பள்ளிகளை மீண்டுமாக திறக்க அனுமதி அளித்தது. அந்த வகையில் பள்ளிகள் தோறும் 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களும் மீண்டும் வழக்கமான வகுப்புகளை துவங்கின. இப்போது தேசிய தலைநகரில் உள்ள பல தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில பள்ளிகள் மட்டும் ஜனவரி 3 முதல் வகுப்புகளை தொடங்க முடிவு செய்துள்ளது.
மதுரையில் நாளை (டிச.22) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
அதாவது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக இல்லாததால் ஜனவரி 3 முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக சில பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் ஒமிக்ரான் நிலைமை அனுமதித்தால் வரும் ஜனவரியில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் என்றும் சில பள்ளி நிர்வாகங்கள் குறிப்பிட்டுள்ளது.