6-12ம் வகுப்பு இடைநிற்றல் மாணவர்களின் விவரங்கள் – பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை!!
2011 ம் கல்வி ஆண்டு முதல் 2021ம் கல்வி ஆண்டு வரை 6 முதல் 12ம் வகுப்பில் பயின்ற இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை பள்ளிகல்வித்துறைக்கு அனுப்புமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் திட்டம்:
தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் கல்வி அறிவை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் பல சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும், வயது முதிர்ந்த, பள்ளி படிப்புக்கான வயதை கடந்தவர்கள் கூட கல்வி அறிவை பெறும் வகையில் பல திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றது.
மார்ச் மாத ஜேஇஇ தேர்வுகள் நாடு முழுவதும் தொடங்கியது – என்டிஏ அறிவிப்பு!!!
பள்ளிக்குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை:
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் குடும்ப சூழல் காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர ஊக்கப்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை 2011ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக 2011 -2012 ம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
மாணவர்களின் விவரங்கள்:
பள்ளிகல்வித்துறை இயக்குனர் அவர்கள், 2011 – 2012ம் கல்வி ஆண்டு முதல் 2020 -2021ம் கல்வி ஆண்டு வரை 6 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய மாணவர்களின் எணிக்கையை வருட வாரியாக பள்ளிக்கல்வித்துறை ‘கே’ பிரிவுக்கு மார்ச் 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவரங்களின் நகலினை பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்திற்கு அனுப்புமாறும் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்