தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம் முதல் ஜவுளிக்கடை திறப்பு வரை – 6ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்?
தமிழகத்தில் தற்போது வரும் ஜூன் 28ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அதன்பிறகு அறிவிக்கப்பட உள்ள தளர்வுகளை பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை பற்றியும் முதல்வர் இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் அதிகரித்த காரணத்தால் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். இதனால் தமிழகத்தில் மிக தீவிரமாக கட்டுப்பாடுகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் பல கட்டங்களாக தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியது.
TN Job “FB Group” Join Now
கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிக அளவிலேயே உள்ளது. கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள மாவட்டங்களில் தமிழக அரசு கடந்த 2 வாரங்களாக பல தளர்வுகளை அளித்துள்ளது. பாதிப்புகள் குறைவாக உள்ள 23 மாவட்டங்களில் கடைகள் மாலை 5 மணி வரை திறப்பதற்கும், ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் பயணிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – அமைச்சர் முக்கிய தகவல்!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கவும் அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் 28ம் தேதியுடன் இந்த கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ளது. இதனால் அடுத்தகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளிப்பது குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணைய (TNPSC) புதிய செயலர் – உமா மஹேஸ்வரி நியமனம்!
பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சிறிய கோயில்கள் திறப்பதற்கு அனுமதி, 50% நகரப் பேருந்துகள் இயக்க அனுமதி, பெரிய கடைகளை குளிர்சாதன வசதி இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதி, நூலகம், அருங்காட்சியகத்தை திறக்க வாய்ப்பு, ஜவுளி மற்றும் நகை கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க அனுமதி போன்ற தளர்வுகளை அளிக்க வாய்ப்பிருப்பதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.