மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!
தற்போது 7வது சம்பள கமிஷனின்படி ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி தொகை (DA) 6% உயர்வுடன் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்வடைய வாய்ப்புள்ளது.
DA உயர்வு:
தற்போது துவங்கி இருக்கும் ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை குறிப்பிடத்தக்க உயர்வைக் காணும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மே மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்களின்படி, இந்த முறை DA உயர்வு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு DA குறைந்தது 6% உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஏப்ரல் மாதத்தில் AICPI குறியீட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது.
Exams Daily Mobile App Download
அதாவது, AICPI குறியீடு 1.3 புள்ளிகள் உயர்ந்து தற்போது 129 புள்ளிகளாக உள்ளது. இதுவரைக்கும், ஜூன் மாதத்தின் AICPI எண்ணிக்கை மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் ஜூன் மாதத்தில் AICPI குறியீடு கூடுதலாக அதிகரிக்கும் பட்சத்தில் டிஏவில் 6 சதவீத உயர்வு இருக்கும். இப்போது, ஜூன் மாதத்தில் இந்த குறியீடு 130ஐ தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு 6% என சந்தேகத்திற்கு இடமின்றி உயரும் வாய்ப்பு கிட்டும்.
ஜூலை 4 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அதிகரிக்கும் கொரோனா தொற்று! அரசு முடிவு!
இப்போது 6% DA அதிகரிப்பால் ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த அகவிலைப்படி 40% ஆக உயரும். தற்போது வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி கொடுக்கப்படுகிறது. இதை தொடர்ந்து 40% DA உயர்வுடன் அவர்களின் ஊதியத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும். இந்த AICPI குறியீட்டின் அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மதிப்பிடப்படுகிறது. மத்திய தொழிலாளர் அமைச்சகம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI) தரவை நாடு முழுவதும் உள்ள 88 மையங்களின் ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.