இந்தியாவில் 5G-யை தொடர்ந்து 6G சேவை அறிமுகம்? பிரதமர் பேச்சு!
இந்தியாவில் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு கூடுதல் நன்மை அளிக்கும் வகையில் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது இந்தியாவில் 5ஜிக்கு மத்தியில் 6ஜி வர உள்ளதாக பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார்.
6G சேவை:
இந்தியாவில் அறிவியல் முன்னேற்றத்தால் நாளுக்கு நாள் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இணையப் பயன்பாடு என்பது சர்வ சாதாரணமாக மாறி விட்டது. மேலும் இணையத்தின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் 2ஜி யில் இருந்து நாம் இப்போது 5ஜி க்கு வந்து விட்டோம். தற்போது நாட்டில் 5ஜி சேவைகளை வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தது. அதில் மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி ஏலம் விடப்பட்டது.
ரயில் பயணிகளுக்கு இனி WhatsApp மூலம் உணவு டெலிவரி – வெளியான சூப்பர் அறிவிப்பு!
முதல் கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் என்று மத்திய தொலை தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. பிறகு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் 5ஜி சேவைகள் சென்றடையும் என்றும் 4ஜி வேகத்தை காட்டிலும் 10 மடங்கு கூடுதலான வேகத்தில் 5ஜி இணைப்பு இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே போபால், டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் 5ஜி முன்னோட்ட சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் 20 ஆண்டுகால பயன்பாட்டுக்கான இந்த ஏலத்தில் நிறுவனங்களின் நிதிச் சுமையை குறைக்க லத் தொகையை 20 தவணைகளாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது இந்திய மக்கள் 5ஜி சேவையை எதிர்பார்த்து வரும் நிலையில் 6ஜி சேவை குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். 2023-க்குள் இந்தியாவில் 6ஜி சேவையை அறிமுகம் செய்யும் நோக்கில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இணைய பயன்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்