தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா பயணம் – செம்ம சான்ஸ்!!
தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு ஆன்லைன் வினாடி வினா போட்டியானது நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மனைவியர்களை தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சிற்கு அழைத்து செல்கிறார்.
துபாய் பயணம்
தமிழகத்தில் நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை ஆனது பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியும் அதனை விரைவில் செயல்படுத்தியும் வருகிறது. மேலும் மாநில அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், விளையாட்டு, அறிவியல் நூல் வாசிப்பு, நுண்கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய, மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் வினாடி-வினா போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஆன்லைன் முறையில் வினாடி வினா போட்டியானது நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களை தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஷார்ஜா புத்தக கண்காட்சிற்கு அழைத்து செல்கிறார்.
2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு – Sales Force நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
அதன்படி இன்று திருச்சியில் ரயில் நிலையத்தில் 67 மாணவர்களுடனும் மற்றும் ஆசிரியர்களுடனும் கல்வித்துறை அமைச்சர் ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சிற்கு செல்ல உள்ளனர். இந்த புத்தக கண்காட்சியானது துபாயில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்வதுடன் துபாய் மற்றும் அபுதாபியில் இருக்கும் துபாய் பள்ளிகள், ஆய்வகங்கள், சுற்றுலா தலங்களுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.