தமிழகத்திற்கு 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் – நேற்று வருகை!
மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ள 60,000 கோவாக்சின் தடுப்பூசிகளை விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ள நிலையில், அவை தமிழக சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவாக்சின் தடுப்பூசிகள்:
இந்தியாவில் மத்திய அரசின் ஒப்புதலின் படி கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல், முதல் கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவருக்கும் செலுத்தப்பட்டது. தவிர 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்குட்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இரண்டாம் கட்டமாக செலுத்தப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் பயோ சென்சார் கருவிகள் – நிதியமைச்சர் தகவல்!
மே மாதம் 1 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பல மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் செலுத்திக் கொள்கின்றனர். மேலும், தமிழகம் தடுப்பூசியை முறையாக பயன்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தின் சிறந்த coaching centre
தமிழகம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிலையில், மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தமிழகத்திற்கு 75 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை ஐதராபாத்திலிருந்து அனுப்பிவைத்தது. நேற்று கூடுதலாக மேலும், 60,000 டோஸ் தடுப்பூசிகள் 12 பார்சல்களில் காலை 9.30 மணிக்கு ஐதராபாத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தது. விமான நிலைய அதிகாரிகள் தடுப்பூசியை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.