TNPSC 6000 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – குரூப் 2, 2A விபரங்கள் விரைவில் வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீப காலமாக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிக்கை நாளை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
குரூப் தேர்வு அறிவிக்கை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission – TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இதில் தகுதி நிலைக்கேற்ப போட்டித்தேர்வுகளான குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 VAO ஆகியவை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுகிறார்கள். இந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளி வராமல் இருந்தது. இருப்பினும் தற்போது தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் நேரடி முறையில் தரிசன டிக்கெட்டு!
இந்த நிலையில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த மாதம் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என TNPSC தெரிவித்துள்ளது. TNPSC போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் TNPSC தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து TNPSC போட்டி தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாளும் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் முக்கிய அம்சங்கள்!
இந்த நிலையில் தற்போது குரூப் 2, குரூப் 2 தேர்வு மூலம் தகுதியான 6000 பேர் தேர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வகையில் குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு TNPSC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.