மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.6000 உதவித்தொகை – ஆதாரை இணைக்க ஏப்ரல் 31 கடைசி நாள்!

0
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.6000 உதவித்தொகை - ஆதாரை இணைக்க ஏப்ரல் 31 கடைசி நாள்!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.6000 உதவித்தொகை - ஆதாரை இணைக்க ஏப்ரல் 31 கடைசி நாள்!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.6000 உதவித்தொகை – ஆதாரை இணைக்க ஏப்ரல் 31 கடைசி நாள்!

பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு ஒரு வருடத்தில் 4 மாதங்களுக்கு ரூ.2000 வீதம் ரூ.6000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தற்போது தங்களின் ஆதார் கார்டை இத்திட்டத்துடன் இணைக்க வேண்டும். இதற்காக நாளை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு

இந்தியாவில் விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். தற்போது நாட்டில் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய தொடங்கியுள்ளது. மேலும் விவசாயிகளின் முதிர்வு காலத்தில் அவர்கள் மிகவும் பொருளாதார ரீதியாக பிரச்சனைகளை மேற்கொள்ள வேண்டிருந்தது. அதனால் இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதியுதவி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த திட்டத்தை பற்றிய முழு விபரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

TNPSC குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் – தேர்வாணையம் அறிவிப்பு!

பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதியுதவி திட்டத்தில் இணைவதற்கு நீங்கள் நிலம் வைத்துள்ள விவசாயியாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்தவர்களுக்கு ஆண்டுக்கு 4 மாதம் ஒரு முறை ரூ.2000 வீதம் 6000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த ஊக்க தொகை வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான பொருட்களை வாங்க உதவியாக இருக்கும். தற்போது இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண் விவரங்களை செல்போன் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

 

இதற்கு பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் pmkisan.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்களின் ஆதார் விவரங்களை பதிவு செய்து அதன்பின் தங்களின் மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். இதன் மூலம் நீங்கள் ஆதார் விவரத்தை இணைத்ததை உறுதி செய்து கொள்ளலாம். இதனை வருகிற 31ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு இன்று காலை 10 மணி அளவில் பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்தில் பொது சேவை மைய முகவர்களால் ஆதார் எண்ணை இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!