மத்திய அரசின் PM KISAN ரூ.6000 உதவித்தொகை – ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
மத்திய அரசு விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் PM KISAN திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அப்போது இந்த கணக்குடன் ஆதாரை இணைக்குமாறு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆதாரை இணைப்பது குறித்த எளிய வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.
PM KISAN திட்டத்தில் ஆதார்:
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வைத்திருக்கும் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும். அவ்வாறு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – புதிய சம்பளம் கணக்கீடு!
இந்த ஊக்கத் தொகையானது 3 மாதங்களுக்கு ஒரு முறை என்று அந்தந்த விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதுவரை 9 தவணைகள் செலுத்தப்பட்டுள்ளது. 10வது தவணை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் PM KISAN கணக்குடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே தொடர்ந்து ரூ.6000 பலன்பெற முடியும் என்று அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் ஊக்கத்தொகை கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளது.
ஆதாரை PM KISAN கணக்குடன் இணைப்பது பற்றிய வழிமுறை இதோ:
- உங்கள் ஆதார் எண்ணை இணைக்கப்பட வேண்டிய வங்கி கிளைக்கு சென்று, ஆதார் நகலில் வங்கி அதிகாரி முன்னிலையில் கையொப்பமிட்டு கொடுக்க வேண்டும்.
- உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்ட பின்னர் வங்கி அதிகாரியால் ஆன்லைன் மூலம் வங்கி கணக்குடன் 12 இலக்க ஆதார் எண் நிரப்பப்படும்.
- பின்னர் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் விதமாக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு SMS வரும்.