தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – அண்ணா பல்கலை 6 மாணவர்களுக்கு தொற்று உறுதி!

0
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - அண்ணா பல்கலை 6 மாணவர்களுக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - அண்ணா பல்கலை 6 மாணவர்களுக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – அண்ணா பல்கலை 6 மாணவர்களுக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 40 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து தொழிற்துறை நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!

அத்துடன் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஓமைக்ரான் வைரஸின் புதிய வகையான பிஏ 4 வைரஸ் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதனை தொடர்ந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து தற்போது பல்வேறு இடங்களில் கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா பரிசோதனைகள் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு 40 மாணவர்களை பரிசோதனை மேற்கொண்டதில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!