மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 6% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜூலை மாதத்தில் அறிவிப்பு!
தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் வரும் ஜூலை மாதத்தில் 6% அகவிலைப்படி (DA) உயர்வை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
அகவிலைப்படி உயர்வு
அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் உயர்வு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த உயர்வு சமீபத்தில் வெளிவந்துள்ள அகில இந்திய CPI-IW தரவு மூலம் உறுதியாகி இருக்கிறது. ஏனென்றால் ஏஐசிபி இன்டெக்ஸ், ஏப்ரல் மாதத்திற்கான டிஏவை நிர்ணயிப்பதில் முக்கியமான காரணியாக இருக்கிறது. இது மத்திய அரசின் டிஏ தொகையை அதிகரிப்பதற்கான சான்றை குறிக்கிறது. அந்த வகையில் ஜூலை மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்னும் சில நல்ல செய்திகள் கிடைக்கலாம் என்று தெரிகிறது.
Exams Daily Mobile App Download
இது குறித்த சமீபத்திய ஊடக அறிக்கைகளை நம்பினால், ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் ஆறு சதவீதம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்த DA தொகை 40 சதவீதத்தை எட்டக்கூடும். அதாவது, ஏப்ரல் மாதத்திற்கான அகில இந்திய CPI-IW 1.7 புள்ளிகள் அதிகரித்து 127.7 ஆக இருந்தது. இப்போது அடுத்தபடியாக அரசு ஊழியர்களுக்கு மே மாதத்திற்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் அதிகரித்தால், டிஏ எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். அதாவது 6 சதவீதம் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் வருகிற ஜூலை 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
பொதுவாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. இப்போது ஏப்ரல் மாதத்திற்கான ஏஐசிபி இன்டெக்ஸ் தரவுப்படி, டிஏ தொகை 6 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த டிஏ 40 சதவிகிதம் வரை உயரலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.16 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர். இந்த கூடுதல் தவணைத் தொகை ஜூலை 1 முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.