Post Office இன் மாதாந்திர சேமிப்பு திட்டம் – 6.6% வரை வட்டி! முழு விபரம் இதோ!
மத்திய அரசு மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நல்ல வட்டி மற்றும் நடுத்தர மக்கள் சேமிக்கும் வகையில் இருக்கும் ஒரே திட்டம் மாதாந்திர சேமிப்பு திட்டம் மட்டுமே.
மாதாந்திர சேமிப்பு:
மத்திய அரசு மக்கள் அனைவரும் எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை புரிந்து அதற்கு ஏற்றார் போல் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களது சேமிப்பை பல்வேறு அமைப்புகளில் தொடங்க திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவது அஞ்சல் துறை முதலீடு என்றே கூறலாம். ஏனெனில் அஞ்சல் துறை மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.3) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இந்நிலையில் சாதாரணம் மக்களுக்கும் உதவும் வகையில் அஞ்சல் துறையில் ஒரு சிறந்த மாதாந்திர வருவாய் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் முதலீடு செலுத்தலாம். இந்த அத்திட்டத்தை தனிநபர் கணக்கு (Single Account) மற்றும் கூட்டு கணக்கு (Joint Account) என எப்படி வேண்டுமானாலும் கணக்கை தொடரலாம். தனிநபராக இந்த கணக்கை தொடர்ந்தால் 4.5 லட்சம் முதலீடு செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் இத்திட்டத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களது வருமானத்தை சேமிக்கும் விதமாக கூட்டுக் கணக்காக தொடர்ந்தால் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
சோப்பு, சாம்பு உள்ளிட்ட பொருட்களின் விலை 33% வரை அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!
இந்த முதலீட்டின் மெச்சூரிட்டி காலம் 5 வருடங்கள் ஆகும். அதாவது இந்த 5 ஆண்டுகளுக்கு இடையில் பணம் பெற முடியாது. அவ்வாறு பெற நினைத்தால் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு 6.6% வட்டி வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த கணக்கை திறப்பதற்கு அருகில் உள்ள தபால் நிலையத்தில் அடையாள அட்டை, முகவரி சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ கொடுத்து கணக்கை தொடங்கலாம்.