தமிழக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு – அரசு முடிவு!
தமிழக சுகாதாரத் துறையில் பணிபுரியும் பெண் ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 40,000 பெண் ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகப்பேறு விடுமுறை:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயன் பெற்றுள்ளனர். அடுத்த கட்டமாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இவர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆன நிலையிலும் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என்பது தற்போது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இனி இத்தனை கார்டுகள் செல்லாது!
முதல் கட்டமாக 2016-ம் ஆண்டு மகப்பேறு விடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதலில் 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டது. பிறகு 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. விடுப்பு காலத்தில் ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படும். தற்போது அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு ஒரு வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது. அரசு ஊழியர்களை தொடர்ந்து சுகாதார துறையில் ஒப்பந்த ஊழியர்களுக்கும் 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடுப்பில் சுமார் 40,000 பேர் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் 4,848 செவிலியர் ஊதியம் ரூ.14,000-ல் இருந்து ரூ.18,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஹெல்த் கேர் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.3,000 உயர்த்தி வழங்கப்படும். மேலும் தமிழகத்தில் பல் மற்றும் வாய் சுகாதார சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.