நடப்பு நிதியாண்டில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – மத்திய அரசு ரூ.1900 கோடி மானியம்!
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க மத்திய அரசு ரூ.1900 கோடி மானியம் வழங்கி உள்ளதாக அதிகாரி கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பு பயிற்சி:
தற்சமயம் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்கிற சூழ்நிலை அமைந்து வருகிறது. இதனால் பலரும் சுயதொழில் தொடங்குவது குறித்து முயற்சித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று திருத்தங்கலில் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் கிராமத் தொழில்கள் வாரியம், மாவட்ட தொழில் மையம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க மத்திய அரசு ரூ.1900 கோடி மானியம் வழங்கி உள்ளதாக கோட்ட அதிகாரி கூறியுள்ளார்.
அரசு கல்லூரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் – அமைச்சர் அறிவிப்பு!
இந்த விழிப்புணர்வு முகாமில் கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தை சேர்ந்த அன்புச்செழியன், கோமதிநாயகம், விருதுநகர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சண்முகவேல், ஜெயசெல்வம், தங்கலட்சுமி, முத்து தையல் பயிற்சி நிலைய நிறுவனர் பாத்திமா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கடந்த வருடம் தமிழகத்துக்கு மட்டும் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 44 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
TN Job “FB Group” Join Now
தொழில் தொடங்கும் போது என்ன தொழில் தொடங்க வேண்டும் என்று யோசித்து தொடங்க வேண்டும். நீங்கள் தொழில் தொடங்கி பொருட்களை உற்பத்தி செய்தால் அந்த பொருட்கள் தரமானதாக இருந்தால் அதை விற்பனை செய்யவும் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் ஏற்பாடு செய்யும். எனவே தொழில் தொடங்க அனைவரும் முன்வர வேண்டும் என கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் மதுரை கோட்ட இயக்குனர் அசோகன் கூறினார்.