இன்று முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!
புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்து கொண்டு வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இன்று முதல் பள்ளிகள்,கல்லூரிகளை திறக்க உள்ளது.
பள்ளி, கல்லூரி திறப்பு
இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் அதிகரித்து வந்தது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் பரவல் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வந்தது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் தொற்று பரவல் அதிகரித்து வந்ததால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இதில் குறிப்பாக ஜனவரி 10 முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் அறிவிப்பு? பொதுமக்கள் அதிர்ச்சி!
அத்துடன் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 18 ஆம் தேதியிலிருந்து விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. தற்போது புதுச்சேரியில் தொற்று பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலன் கருதி இன்று முதல் மீண்டும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
மதுரை TVS பள்ளியில் LKG மாணவர் சேர்க்கை இன்று முதல் துவக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதன்படி இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் மத்தியில் அச்சம் உள்ளதால் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தி கொள்ளலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.