தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்பு கட்டாயம்!

0
தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்பு கட்டாயம்!
தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்பு கட்டாயம்!
தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்பு கட்டாயம்!

தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் வரும் ஜன.20ம் தேதிக்கு பின் செமஸ்டர் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தி தேர்வுக்கான பாடங்களை விரைவில் முடிக்குமாறு மீண்டும் உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

6 நாட்கள் வகுப்பு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் கடந்த செப்.1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – 11.6 லட்சம் சைகோவ்-டி டோஸ்கள்!

அதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடத்தும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் தேர்வுக்கான பாடங்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பாடங்கள் நடத்தி முடிக்காமல் தேர்வுகள் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். அதன்பின் செமஸ்டர் தேர்வு ஜன.20க்கு பின்னர் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தி பாடங்களை விரைவில் நடத்தி முடிக்குமாறு உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

தமிழகத்தில் சனிக்கிழமை (டிச.4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்நிலையில் தொடர்ந்து மழையின் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுளளது. மேலும் வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை முன்னிட்டு அதிக விடுமுறை நாட்களும் வர உள்ளன. இதனை கருத்தில் கொண்டு அனைத்து இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் மீண்டும் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கல்லூரி மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்தி தேர்வுக்கான பாடங்களை விரைந்து நடத்தி முடிக்குமாறு உயர் கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!