6 கோடி தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – நிபுணர்கள் அச்சம்!!
அமெரிக்காவில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் காலாவதியாகும் அபாயம் இருப்பதாக அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காலாவதியாகும் தடுப்பூசிகள் :
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்தைக் கடந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அமெரிக்காவின் வட கிழக்கு பகுதிகளில் தான் குறிப்பாக அதிகரித்திருக்கிறது. இந்த நோய் தொற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டு மக்களை தொற்றிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணியை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தியது தங்கள் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவுக்குள் இருக்கும் தடுப்பூசி மையத்துக்குச் சென்று தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ஜி-7’ உச்சி மாநாட்டில் தலைவர்கள் உறுதி – மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி
65 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது. ஆனால் அமெரிக்க மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் நிறைய பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின்’ எண்ணிக்கை குறைந்து விட்டது. ஒக்லஹோமா மாகாணத்துக்கு வாரந்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும், தற்போது 1 மாதத்துக்கும் மேலாக புதிதாக ஒக்லஹோமா கோவிட் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யவில்லை.
TN Job “FB Group” Join Now
டென்னஸீ, வடக்கு கரோலினா போன்ற மாகாணங்களில் தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை மிக குறைந்துள்ளது. இதனால் தடுப்பூசிகள் அரசிடம் அதிகம் தேங்கியுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் நிலவியுள்ளது.என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையம் சலுகைகளையும் அளித்த போதிலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவது இல்லை. இதனால் தடுப்பூசி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.