5ஜி அலைக்கற்றை 4 ஆண்டு தவணைத்தொகை செலுத்திய ஏர்டெல் – முக்கிய தகவல் வெளியீடு!

0
5ஜி அலைக்கற்றை 4 ஆண்டு தவணைத்தொகை செலுத்திய ஏர்டெல் - முக்கிய தகவல் வெளியீடு!
5ஜி அலைக்கற்றை 4 ஆண்டு தவணைத்தொகை செலுத்திய ஏர்டெல் - முக்கிய தகவல் வெளியீடு!
5ஜி அலைக்கற்றை 4 ஆண்டு தவணைத்தொகை செலுத்திய ஏர்டெல் – முக்கிய தகவல் வெளியீடு!

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நிறைவடைந்த நிலையில், 4 ஆண்டு தவணைத் தொகை ரூ.8,312.4 கோடியை மத்திய அரசுக்கு பார்தி ஏா்டெல் நிறுவனம் முன்கூட்டியே செலுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

4 ஆண்டு தவணைத் தொகை:

நாடு முழுவதும் இணைய சேவையின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் பணியாற்றி வருகின்றனர். முதன் முதலில் இந்தியாவில் 2ஜி அலைக்கற்றை தான் தொடங்கியது. பின்னர் நாளடைவில் 3ஜி, 4ஜி யைத் தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பமும் தற்போது இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பமும் அடியெடுத்து வைக்கிறது. அதாவது, 5ஜி தொழில்நுட்பம் இணைய சேவையின் வேகத்தை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி ஆகியவற்றின் வேகத்தையும் அதிகரிக்க இருக்கிறது.

இந்த 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. இந்நிலையில் 5ஜி அலைக்கற்றைக்கான 4 ஆண்டு தவணைத் தொகை ரூ.8,312.4 கோடியை மத்திய அரசுக்கு பாார்தி ஏா்டெல் நிறுவனம் முன்கூட்டியே செலுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, அண்மையில் நடந்து முடிந்த 5ஜி ஏலத்தில், நிறுவனம் வாங்கிய அலைக்கற்றைக்காக ரூ.8,312.4 கோடியை மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்தியுள்ளோம்.

இதன் மூலம், அந்த அலைக்கற்றைக்கான 4 ஆண்டு தவணைகளும் முன்கூட்டியே செலுத்தப்பட்டு விட்டது. அவ்வாறு முன்கூட்டியே தவணைத் தொகைகளை செலுத்துவதால், எதிா்காலத்தில் பணவரத்தை எளிமையாகக் கையாளவும், 5ஜி சேவைகளை வாடிக்கையாளா்களுக்கு சிறப்பாக அளிப்பதில் கவனம் செலுத்தவும் உதவும் என்று நிறுவனம் கருதுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையினருக்கான ஹாப்பி நியூஸ் – விடுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் 5ஜி சேவைகளைத் தருவதற்காக அண்மையில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில், பாா்தி ஏா்டெல் நிறுவனம் சாதனை அளவாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றது. அந்தத் தொகையில், முன்பணமாக ரூ.3,848.88 கோடி ரூபாயும், எஞ்சிய தொகையை 19 வருடாந்திர தவணைகளாக செலுத்தவும் பாா்தி ஏா்டெல்லுக்கு தொலைத்தொடர்புத் துறை அனுமதி அளித்திருந்தது. இருப்பினும் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக ரூ.8,312.4 கோடியை பாா்தி ஏா்டெல் முன்பணமாக செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!