இந்தியாவில் வரவிற்கும் 5G சேவைகள் – Jio நிறுவனம் அளித்த வாக்குறுதி!
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவை எப்போது அறிமுகமாகும் என பயனர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெற்று முடிந்து விட்டது. அதில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jio 5G சேவை:
இந்தியாவில் 2ஜி,3ஜி,4ஜியை தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பம் அடியெடுத்து வைக்கிறது. இந்த 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மேலும் 7 நாட்கள் நடைபெற்ற ஏலத்தின் முடிவில் 1,50,173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது 72,098 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்திற்கு ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 51,236 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.\
Exams Daily Mobile App Download
மேலும் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் ரூ. 88 ஆயிரத்து 078 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இதன் மூலம் நாட்டில் மிகப் பெரிய 5ஜி நெட்வொர்க் கொண்ட நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24 ஆயிரத்து 740 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இந்தியாவின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரூ. 1,50,173 கோடி மதிப்பிலான தொகை ஈட்டப்பட்டு உள்ளது.
இதில் மொத்தம் 71%ஜி ஏர்வேவ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
NEET மதிப்பெண் இல்லாமல் காலிப்பணியிடங்கள் நிரப்பல் – முக்கிய தகவல்
இந்த ஏலத்தில் மொத்தம் 72 ஆயிரத்து 098 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 51 ஆயிரத்து 236 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் ஏலத்தின் முடிவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 22 வட்டாரங்களிலும் 5ஜி நெட்வொர்க் பயன்படுத்தும் உரிமத்தை பெற்று இருக்கிறது. இதன் மூலம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்க முடியும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் உலகின் மிகப்பெரிய 4ஜி நெட்வொர்க்கை குறுகிய காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து சாதனை படைத்தது. மேலும் உலகிலேயே மலிவான, அதே சமயம் தரமான தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வரும் ஜியோ 40 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும் 5ஜி சேவையில் ஜியோ நிறுவனம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது. உலகத்தரமான 5ஜி சேவையை வழங்க ஜியோ நிறுவனம் உறுதி அளிப்பதாகவும் , கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில்துறை, மின் ஆளுமை ஆகிய துறைகளில் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு உத்வேகமூட்டும் வகையில் ஜியோ நிறுவனம் சேவைகளை வழங்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.