மாநிலத்தில் விரைவில் தொடங்க இருக்கும் 5ஜி சேவை – அமைச்சர் விளக்கம்!
இந்தியாவில் பல மாநிலங்களில் 5ஜி சேவை விரைவில் வர இருக்கும் நிலையில் ஒடிஷா மாநிலத்திலும் முதல் கட்டமாக 5ஜி சேவை கிடைக்க இருப்பதாக மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
5ஜி சேவை:
இந்தியா மொபைல் காங்கிரஸ் தொடக்க விழாவில் அரசு அதிகாரப்பூர்வமாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்கான ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த 5ஜி சேவை குறித்து சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அதாவது புதிய தொழில்நுட்பம் காரணமாக மக்களுக்கு அதிக செலவு ஏற்படும் எனவும், 5ஜி சேவை காரணமாக அதிகமான கதிர்வீச்சு இருப்பதால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் பல தரப்பில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த 5ஜி சேவை முதல் கட்டமாக ஒடிஷா மாநிலத்தில் தொடங்கப்பட இருக்கிறது. அதனால் அது குறித்து மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
Exams Daily Mobile App Download
அதில் 5G கதிர்வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரவலாக விவாதிக்கப்பட்ட நிலையில் இதில் அந்த அளவிற்கு கதிர்வீச்சு இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். இது வெளியிடும் கதிர்வீச்சின் அளவு உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த கதிர்வீச்சு விதிமுறைகளை விட 10 மடங்கு குறைவாக இருப்பதாகவும் அதனால் மக்கள் அச்சப்பட தேவை இல்லை என அவர் தெரிவித்தார். 5ஜி சேவை தொடங்கியதும் பயனர்கள் 4ஜியை விட 10 மடங்கு அதிக வேகத்திலும், 3ஜியை விட 30 மடங்கு அதிக வேகத்திலும் சேவையை பெறலாம் என அவர் தெரிவித்தார். அதனால் இனி பயனர்கள் தரவுகளை பதிவிறக்கம் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்