இந்தியாவில் 5ஜி சேவை வெற்றிகரமாக தொடக்கம் – பிரதமர் பெருமிதம்!

0
இந்தியாவில் 5ஜி சேவை வெற்றிகரமாக தொடக்கம் - பிரதமர் பெருமிதம்!
இந்தியாவில் 5ஜி சேவை வெற்றிகரமாக தொடக்கம் - பிரதமர் பெருமிதம்!
இந்தியாவில் 5ஜி சேவை வெற்றிகரமாக தொடக்கம் – பிரதமர் பெருமிதம்!

இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கிய நாளான இன்று (01-10-2022) 5ஜி சேவை வெற்றிகரமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பெருமிதம்:

நாட்டில் உள்ள தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு புதிய முயற்சிகளை எடுத்து வந்தது. அதன்படி, நாட்டின் இணைய சேவையின் வேகத்தை அதிகரிக்க நினைத்தது. இதற்காக கடந்த ஆண்டு முதல் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் சோதனைக்கு அனுமதி அளித்தது. சோதனையின் முடிவுகள் பெறப்பட்டு மத்திய அரசு 5ஜி சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.

அனைத்து கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு முறையாக 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான ஏலம் நடத்தப்பட்டது. இதை, ஜியோ நிறுவனம் அதிக தொகையை செலுத்தி அதிக அளவிலான 5ஜி ஒதுக்கீட்டை பெற்றது. இந்த வரிசையில் 2ம் இடத்தில ஏர்டெல் நிறுவனமும், 3ம் இடத்தில் Vi நிறுவனமும் உள்ளது. முன்னதாக அக்டோபர் 1ம் தேதி 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஷாக்கிங் தகவல்.. கொத்து கொத்தாக வேலை இழக்க போகும் ஐ.டி ஊழியர்கள்!!

Exams Daily Mobile App Download

அதைபோலவே, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை 10 மணி அளவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம் மத்திய அரசு ரூ.1.50 லட்சம் வருமானத்தை பெற்றுள்ளது. இதன்மூலம் அதிவேகத்தில், தடைகள் இல்லாமல் இணைய வசதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விழாவில் பிரதமர் 5ஜி சேவை குறித்து பெருமிதமாக உரையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!