நாட்டின் விமான நிலையங்களுக்கு அருகில் 5G Base Station பகுதி? – மத்திய அரசு அறிவுறுத்தல்!
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அருகில் தகவல் தொடர்புகளை மேற்கொள்ள உதவும் பேஸ் ஸ்டேஷன் பகுதி இருப்பது குறித்து மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தல்:
இந்திய விமான நிலைய பகுதிகளுக்கு அருகில் தொடர்புகளை மேற்கொள்ள உதவும் பேஸ் ஸ்டேஷன் குறித்து தகவல் தொடர்பு துறைக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விமான நிலையத்தின் ஓடு பாதைகளில் இருந்து 2.1 கிமீ தூரத்திற்குள் 3,300-3,670 MHz அலைவரிசையில் C-band 5G ஸ்பெக்ட்ரம் கொண்ட பேஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட கூடாது என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கார்டு.. வங்கி கணக்கு எண் இணைப்பு – அரசின் முக்கிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
மேலும், இவற்றை நிறுவும் போது அதற்கான கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அரசு அறிவுறுத்தியுள்ள வரம்பை மீறுவது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது. பொதுவாக, அதிகபட்சமாக 3,300-3,670 MHz வரம்பில் 58 dBm/ MHz ஆக தான் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.