தமிழக மின்வாரியத்தில் 58,000 காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப கோரி போராட்டம்!
தமிழக மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தி கோரிக்கைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் மின்வாரிய ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்:
தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பும் நோக்கில் அரசு அவ்வபோது காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது அதன் அடிப்படையில் தற்போது TNPSC தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் நடைபெற்று வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து தமிழக மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதிகரித்துள்ள காலியிடங்களால் பணியில் உள்ள ஊழியர்களின் வேலைப்பளு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மின் வினியோக வட்ட தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில் நேற்று மின் வாரியத்தில் உள்ள 58,000 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரி போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பொதுத் தேர்வெழுதாத மாணவர்களுக்கான மறுதேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.