தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு!
தமிழக மின்வாரியத்துறையில் உதவி பொறியாளர் உட்பட மூன்று பதவிகளுக்கான விண்ணப்பம் பெற்று, இரு ஆண்டுகளாகியும் தேர்வு நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் மின்வாரியத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
வேலைவாய்ப்பு:TNPSC
தமிழகத்தில் 2022ம் ஆண்டு தொடங்கியுள்ளதை அடுத்து அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக மின்வாரிய துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஏற்கனவே மின்சாரத்துறையில் 600 உதவி பொறியாளர்; 500 இளநிலை உதவியாளர் – கணக்கு 1,300 கணக்கீட்டாளர் என மொத்தம் 2,400 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. 2020 பிப்ரவரி மாதம் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
TNPSC காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு – ஏராளமானோர் ஆப்சென்ட்!
பொது பிரிவினரிடம் 1000 ரூபாயும் பட்டியலினத்தவர்களிடம் 500 ரூபாயும் தேர்வு கட்டணமாக பெறப்பட்டது. 2400 பணியிடத்திற்கு சுமார் 1.03 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தேர்வு தேதி வெளியாகும் முன்பு கொரோனா முதல் அலை வேகமெடுத்தல் தடுப்பு பணியாக மத்திய அரசு நாடு தழுவிய முழு பொது முடக்கத்தை அறிவித்தது. அதனால் தேர்வு நடத்த இயலவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் நடைபெறுள்ளாதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள்!
இந்த நிலையில் மின்வாரிய அதிகாரி ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு பணியிடங்களுக்கான தேர்வை, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமே நடத்தும். அதனால் அறிவிக்கப்பட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.