BSNL நிறுவனத்தில் 55 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, சம்பளம் & விண்ணப்ப விவரங்கள்!
இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு தகவல் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
வேலையின் முழு விவரம் !
உலகம் முழுவதையும் அதிக அளவில் பாதிப்பில் தள்ளியது கொரோனா தொற்று. இந்த தொற்று பரவல் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பின்னிலையில் உள்ளது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளையும் அறிவித்து வருகிறது. இந்த வகையில் அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL அலுவலகத்தில் காலியாக உள்ள எலக்ட்ரானிக்ஸ்/E&TC/கம்ப்யூட்டர்/ஐடி அப்ரண்டிஸ் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அப்ரண்டிஸ் சட்டம் 1961 இன் கீழ் ஒரு வருடத்திற்கு தொழிற்பயிற்சி பதவிகளுக்கு பணிக்கு அமர்த்தப்படுவார்கள் .
1.நிறுவனத்தின் பெயர் : BSNL(பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்)
2.பதவியின் பெயர் : எலக்ட்ரானிக்ஸ்/E&TC/கம்ப்யூட்டர்/ஐடி அப்ரண்டிஸ்
3.காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை : 55 பணியிடங்கள்
4.விண்ணப்பதாரரின் வயது வரம்பு: அதிகபட்ச வயது 25 அல்லது குறைவாகவும் இருக்கலாம். அரசு
விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
5.விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி :டிப்ளமோ படித்தவர்கள்
6.விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
7.ஆன்லைன் விண்ணப்பம் தொடக்க தேதி – டிசம்பர் 14, 2021.
8. ஆன்லைன் விண்ணப்பம் தொடக்க தேதி – டிசம்பர் 14, 2021.
9. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – டிசம்பர் 29, 2021.
10.சான்றிதழ் மற்றும் ஆவண சரிபார்ப்பு – ஜனவரி 3, 2022.
11.தேர்வு பட்டியல் அறிவிப்பு – ஜனவரி 5, 2022.
12.விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் முறை : டிப்ளமோ மற்றும் தனிப்பட்ட நேர்காணலில் பெற்ற
மதிப்பெண்களின் தகுதியின் அடிப்படையில் இருக்கும்
13.அப்பிரேண்டிஸ்ஷிப் பயிற்சியின் காலம் – 1 வருடம்
இந்த பதவிகளுக்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், அந்த வணிகப் பகுதியின் (BA) கீழ் வரும் தொடர்புடைய SSA/மாவட்டங்களில் வசிக்கும் விண்ணப்பதாரருக்கு தேர்வுக்கான முன்னுரிமை வழங்கப்படும். இந்த வகையில் BSNL நிர்வாகத்தின் தேவைக்கேற்ப , தேர்ந்தெடுக்கப்பட்ட அப்ரெண்டிஸ்கள் சம்பந்தப்பட்ட வணிகப் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் சேவை செய்யப் பொறுப்பாவார்கள்.
தமிழக அரசு சார்பில் ரூ.5000 வரை சம்பள உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு!
இதன் அடிப்படையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் BSNL-லின் வணிகப் பகுதிகளுக்கான போர்டலான BOAT’s Govt மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே விருப்பமும் தகுதியும் உடையவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.