தமிழகத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு – 35 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

0
தமிழகத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு - 35 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழகத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு - 35 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழகத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு – 35 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

உலகளாவிய தொழில்நுட்ப மாநாடு துவக்க விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 35 நிறுவனங்களுடன் ரூ.17,141 கோடி மதிப்பில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்தார்.

தொழில்நுட்ப மாநாடு:

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக முதல்வர் முக ஸ்டாலின் பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கும் தேவையான அனுமதி மற்றும் நடவடிக்கைகள் வழங்கப்படும் என்று முன்னரே முதல்வர் அறிவித்திருந்தார். தற்போது, உலகளாவிய தொழில்நுட்ப மாநாடு நடைபெற்று வருகிறது. அதன் துவக்க விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் காணொளி வாயிலாக உரையாற்றி உள்ளார். அப்போது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சியில் பெருமைபடத்தக்க வகையில் பங்காற்றி உள்ளது.

GSTக்குள் பெட்ரோல் வந்தால் ஒரு லிட்டர் ரூ.75 ஆக குறையும் – 77% பேர் ஆதரவு!

குறிப்பாக, சென்னை ஐஐடி, தமிழ்நாடு அரசு பல்வேறு முனைகளில் இருந்து எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், தொழில் வளர்ச்சி மிக்க மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் கடலடி கேபிள்கள் மூலம் பசுமை மின் திட்டங்கள் செயல்படுத்த இருப்பதால் மின்மிகை மாநிலமாகத் தமிழ்நாடு மாற உள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் தொழில் தொடங்க ஏற்ற மாநிலமாக இருக்கும்.

நாட்டிலேயே அதிகமான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ள மாநிலமும் தமிழ்நாடுதான். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எல்காட் நிறுவியுள்ளது. உலக தரத்திலான பொருட்களையும், சேவைகளையும் வழங்குவதற்கான வாய்ப்பை இது அங்குப் பணிபுரிவோர்க்கு ஏற்படுத்தித் தருகிறது. இதற்காக தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையம் போன்ற 35 தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ரூ.17,141 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது என்று அறிவித்தார்.

தமிழகத்தில் உயரும் கொரோனா புதிய பாதிப்புகள் – மீண்டும் ஊரடங்கு அமல்?

இதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 55,000 வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் புதிய முயற்சிகளை முன்னெடுக்கவும், ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது. எனவே, தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாகவும் வளர்ச்சியைத் தரும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கும் என்பதை முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் தொழில் நிறுவனத்தினருக்கும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!