இந்தியாவில் மேலும் 54 சீன செயலிகளுக்குத் தடை – மத்திய அரசு திட்டம்! லிஸ்ட் ரெடி!
இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ள சீன செயலிகளுக்கு மத்திய அரசு சார்பில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மேலும் 54 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்யலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
சீன செயலிக்குத் தடை:
இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்தார்கள். அத்துடன் கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளதாக்கில் மீண்டும் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் மேலும் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள். அதனால் சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல்? அரசு திடீர் விளக்கம்!
இந்த தடையை தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69 A என்பதன் கீழ் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்தது. இதில் குறிப்பாக கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 49 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இதனை தொடர்ந்து 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்பு நவம்பர் மாதத்தில் இருந்து டிக் டாக், வீசாட், ஹெலோ ஆப்ஸ் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளுக்குத் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டது. இதில் 45 சீன செயலிகளும், அலிபாபா குழுமத்தின் கீழ் உள்ள 4 செயலிகளும் இடம்பெற்றன.
TNPSC 6000 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – குரூப் 2, 2A விபரங்கள் விரைவில் வெளியீடு!
இதையடுத்து தற்போது இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக மேலும் 54 சீன செயலிகளுக்குத் தடை என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் பியூட்டி கேமரா, ஸ்வீட் செல்பி ஹெச்டி, பியூட்டி கேமரா, செல்பி கேமரா, இக்வலைசர் பேஸ் பூஸ்டர், கேம்கார்டு, ஐஸோலாந்து-2, ஆஷஸ் ஆஃப் டைம் லைட், விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் எக்ஸ்ரிவர், ஓம்யோஜி செஸ், ஓம்யோஜி ஏரினா, ஆப் லாக், டூவல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இந்தியாவில் பயன்படுத்த தடை செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.