TNEB தமிழ்நாடு அரசின் மின்வாரியத்தில் 52000 காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள சங்க உறுப்பினர்கள் அனைவரும் நெல்லை மாவட்ட மின்வாரிய மண்டலத்தின் முன்பு நின்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது முதலான சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஊழியர்கள் போராட்டம்:
தமிழ்நாடு மின்வாரியத்தில் தற்போது 52 ஆயிரம் காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது கோரிக்கைகள் வைத்தும் கூட எந்த காலிப் பணியிடங்களும் தற்போது வரைக்கும் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் தமிழ்நாடு மின்சார வாரிய தொழில் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என மின்சார வாரிய குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் பருவ பாடத்திட்டம் வெளியீடு!
மின்சார வாரிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொள்வதாக இல்லை. இதனால், நெல்லை மாவட்டத்தில் மின் வாரிய மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் கடந்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் எனவும், பஞ்சாயத்து உள்ளிட்ட 23 சலுகைகளை பறிக்கும் வாரிய ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும் மூன்று சதவீத பஞ்சப்படியை உடனடியாக ஊழியர்களுக்கு வழங்க வேண்டுமெனவும், மின் வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், சில கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மின் வாரிய மண்டல செயலாளர் பீர் முகமது ஷா மற்றும் பொதுச்செயலாளர் சாலமோன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஊழியர்களின் இந்த கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக் கொள்ளாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்தப் போவதாகவும் ஊழியர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.