51 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அரசுக்கு கோரிக்கை!!
கோவை மாவட்டத்தில் 51 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பட்டதாரி ஆசிரியர்:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். வெகு நாட்களாக தமிழகத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யவில்லை. அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்தது வருகிறது. அதானல் மாணவர்களின் எண்ணிக்கையை விட ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் காலியாக உள்ள பணியிடங்கள் உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? அரசுக்கு கோரிக்கை!
தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆசிரியர்களும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அரசுப்பள்ளிகளில், விகிதாச்சார அடிப்படையில், மாணவர்களின் எண்ணிக்கை விட கூடுதலாக ஆசிரியர்கள் இருந்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாக, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுக்கு, புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை. பணி நிரவல் அடிப்படையில், தேவைக்கேற்ப இடமாறுதல் மட்டும் வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
கொரோனா தொற்று காரணமாக, ஆசிரியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் விருப்ப ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக காலியிடங்கள் பட்டியல் திரட்டப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், 51 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவில்லை. 51 பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.