பள்ளி மாணவர்களுக்கு 51 நாட்கள் கோடை விடுமுறை – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!
கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதன் காரணமாக வரும் மே 21 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை உள்ள 51 நாட்களுக்கு உத்தரபிரதேச மாநில பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், இரண்டு ஆண்டுகளில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதற்கு பிறகு கொரோனா ஓரளவு குறைந்த காரணத்தினால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முதல் வாரத்திலேயே மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? திமுக அரசின் திட்டம் என்ன?
ஆனால், கொரோனாவின் காரணமாக காலம் தாழ்த்தி தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மே மாதம் முழுக்க பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பள்ளி நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கூடுதல் வெப்பச்சலனத்தின் காரணமாக ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மே முதல் வாரத்தில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த மாநிலங்களை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் வரும் மே 21 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை உள்ள 51 நாட்கள் கோடை விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் டெல்லியில் ஜூன் 18-ஆம் தேதி முதல் இருபத்தி எட்டாம் தேதி வரை உள்ள பத்து நாட்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.