50வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவி ஏற்பு – குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம்!
உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதி யு.யு.லலித் பதவி வகித்த நிலையில், அவருடைய பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளது. அவருக்கு பதிலாக தற்போது புதிய நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் தற்போது பதவி ஏற்று இருக்கிறார்.
புதிய நீதிபதி:
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி யு.யு.லலித் பொறுப்பேற்றார். அவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1957ம் ஆண்டு பிறந்தவர். இவர் 1983 ஆம் ஆண்டு முதல் நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இவருக்கு பதவி நியமனம் செய்து வைத்தார். இந்நிலையில் நவம்பர் 7 ஆம் தேதியுடன் இவருடைய பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்ட புதிய உத்தரவு.. 1 லட்சம் பேருக்கு வேலை Confirm!
Exams Daily Mobile App Download
அதனால் 50வது உச்சநீதிமன்ற நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் தற்போது பதவி ஏற்றுள்ளார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். யு.யு லலித் பதவி ஏற்று 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் அவருடைய பதவிக்காலம் முடிந்துள்ளது. அதனால் அவருடைய சிபாரிசின் பெயரில் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்தார். புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சந்திரசூட், 2 ஆண்டுகள் அதாவது 2024-ம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி வரை இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.