மத்திய அரசு துறைகளில் 5000 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசு துறைகளில் 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டு வருகிறது.
SSC அறிவிப்பு:
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மக்கள் மீண்டும் வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பெரும்பாலும் அரசு பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு துறையில் 5000 காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் வந்துள்ளது. SSC தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளது.
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் உள்ளிட்ட 5,000 காலிப்பணியிடங்கள் உள்ளது. Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA)பணியிடத்திற்கு 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக 19,900- 63,200 வரை வழங்கப்படும். மேலும் Postal Assistant (PA)/ Sorting Assistant (SA) பணியிடத்திற்கு சம்பளம் 25,500 – 81,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிப்ரவரி 27 வரை 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
Data Entry Operator (DEO) பணியிடத்திற்கு மாதம் 29,200 – 92,300 வரை ஊதியம் வழங்கப்படும். அடுத்ததாக Data Entry Operator, Grade ‘A’ பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பில் அறிவியல், கணிதம் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம் 25,500 – 81,100 வரை கிடைக்கும். எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் மூலமாக 100 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 08.03.2022 ஆகும்.