அரசு பள்ளிகளுக்கு 5000 ஆசிரியர்கள் நியமனம் – முதல்வர் அறிவிப்பு!
செப்.5ம் தேதி தொடக்க மற்றும் இடைநிலை கல்வித்துறையால் ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு பள்ளிகளுக்கு சுமார் ஐயாயிரம் ஆசிரியர்களை நியமிப்பதாக கூறியுள்ளார்.
ஆசிரியர் தின விழா:
நாடு முழுவதும் கொரோனா காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தொடக்க மற்றும் இடைநிலை கல்வித்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார்.
6 முதல் 12ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – மாநில அரசு!
அதில் முதல்வர் பேசுகையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. நடப்பு கல்வியாண்டில் சுமார் 5000 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளின் பேரில் அரசு பள்ளிகளுக்கு சுமார் ஐயாயிரம் ஆசிரியர்களை நியமிப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தேசிய கல்வி கொள்கை இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிந்தைய கல்வித் துறையில் நடக்கும் சிறந்த விஷயங்களில் ஒன்று என பாராட்டி நான் கல்விக் கொள்கைகள் படித்தேன். சுதந்திரத்திற்கு பிந்தைய மாணவர்களுக்கு நாம் கொடுக்க கூடிய சிறந்த பரிசு இது எனவும் அவர் கூறினார். ஆசிரியர்கள் கொள்கையை படித்து அவர்களின் ஆலோசனையை சமர்ப்பிக்கும்படி முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். அரசு ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் ஆசிரியர்களிடம் அரசு பள்ளிகளுக்கு சுமார் ஐயாயிரம் ஆசிரியர்களை நியமிப்பதாக முதல்வர் கூறியது பெரும் வரவேற்பை பெற்றது.