ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் ரூ.5000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிய நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.5000 அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
வெள்ள நிவாரணம்:
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்ததடுத்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல அணைகள் நிரம்பின. புதுச்சேரியிலும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. அதனால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது கனமழை சற்று குறைந்துள்ள நிலையில் பல இடங்களில் தேங்கி இருக்கும் வெள்ளநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி சான்றிதழ் அளிக்க முடிவு!
வெள்ள சேதாரங்களை பார்வையிட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதனை அடுத்து கட்டட தொழிலாளர், நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கும் மீனவர்களுக்கும் ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு ஆலோசனை! ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!
அதனை தொடர்ந்து அவர்களை கோரிக்கைகளை ஏற்ற முதல்வர் புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவர்க்கும் ரூ.5000 வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த வாரம் முதல் ரூ.5,000 நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரிக்கு மாநில அரசு அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல தேர்தல் அன்று தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.