தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரிசுத்தொகை:
தமிழகத்தில் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முழு கரும்பு வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 3ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
TCS நிறுவனத்தில் பணியில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – நேர்காணலுக்கு தயாராவது எப்படி?
கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கத்தொகை குறித்த எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் பொங்கல் பரிசுத்தொகை வழங்க அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆலோசித்து விரைவில் ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
தேவையென்றால் முழு ஊரடங்கு அமல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த சுற்றறிக்கையில் ரொக்கப்பணம் என்ற வார்த்தை நீக்கப்பட்டு பரிசுத்தொகுப்பு என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால் பரிசுத் தொகை இல்லை என்பது உறுதியாகிய நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பாஜக செயற்குழு கூட்டத்தில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும் உட்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.