கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.5000 – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சிறு கடைக்காரர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக ஹரியானா மாநில முதல்வர் அறிவித்து உள்ளார்.
கொரோனா நிவாரணம்:
நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்தந்த மாநிலங்களில் உள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரத் தொடங்கி உள்ளது. ஆனால் மறுபுறம் கொரோனா ஊரடங்கால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அறிவித்து வருகின்றன.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 19 முதல் வகுப்புகள் – முதல்வர் துவக்கி வைப்பு!
அந்த வகையில் தற்போது ஹரியானா மாநில அரசு கொரோனா தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் மாநிலத்தில் உள்ள சிறு கடைக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 நிதி உதவி அறிவித்துள்ளது. 2021-22 முதல் காலாண்டில் சொத்து வரி தள்ளுபடி மற்றும் மின்சார கட்டணத்தை குறைத்தல் உள்ளிட்ட பல சலுகைகளையும் அம்மாநில முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.
TN Job “FB Group” Join Now
கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் போன்ற அமைப்புசாரா துறையில் ஈடுபட்டுள்ள 12 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதி தொகுப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் மேலும் தெரிவித்தார். அமைப்புசாரா துறையின் தொழிலாளர்கள் இந்த பெறுவதற்கான பதிவுகள் ஜூன் 18 முதல் தொடங்கும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஆஷா தொழிலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார பணியில் ஈடுபடுவோருக்கு தலா ரூ.5 ஆயிரம் மாநில அரசு அறிவிக்கப்பட்டு உள்ளது.