தமிழக கோயில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் மொட்டை அடிக்கும் பணி செய்து வரும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
ஊக்கத்தொகை வழங்கல்
தற்போது நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தொற்று மறைந்து வந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முறையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரையுள்ள 4 நாட்களுக்கு அனைத்து வகையான மதவழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு, பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
உலகில் முதல்முறையாக குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – கியூபா அறிமுகம்!
இதனிடையே தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் மொட்டை அடிக்கும் பணி செய்து வரும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் உள்ள சில முக்கியமான கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த கோயில்களில் அர்ச்சகர்கள், துப்புரவு பணியாளர்கள், மொட்டை அடிக்கும் ஊழியர்கள் என பலரும் பணி செய்து வருகின்றனர்.
ஒரு வாரம் பள்ளி மூடல் – 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று!
இவர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஊக்கத்தொகை வழங்குவதற்கும் அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மூலம் சுமார் 1,749 இந்து சமய அறநிலையத்துறை கோயில் ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.