மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.500 அதிகரிப்பு – அடுத்த மாதம் முதல் வழங்கல்!
புதுச்சேரியில் விழா ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் மக்களிடையே பேசுகையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அது அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஊக்கத்தொகை:
தற்போது புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். புதுவையில் சமூக நலத்துறை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இணைந்து மத்திய அரசு நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுவை முதலமைச்சர் பயனாளிகளுக்கு முடநீக்கு கருவிகளை வழங்கினார்.
தமிழகத்தில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் – ஆகஸ்ட் 14ம் தேதி தாக்கல்!
அதனை தொடர்ந்து 500 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்புள்ள சக்கர நாற்காலி, 3 சக்கர வாகனம், செல்போன், காது கேட்கும் கருவிகள் போன்ற உபகரணங்களை வழங்கினார் முதல்வர் ரங்கசாமி. மேலும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையில் ரூ.500 உயர்த்தி வழங்குவதாக கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடுத்த மாதம் 7ம் தேதி முதல் உதவித்தொகையில் 500 கூடுதலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவையும் உயர்த்தி தருவதாக நலத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் பத்மாவதி, துணை இயக்குனர் கலாவதி உள்பட பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் முதல்வர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய விகிதாச்சாரம் வழங்கப்படும் என்று கூறியதோடு மத்திய அரசும் துணை நிற்கும் என முதல்வர் வாக்குறுதி கொடுத்தது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.