தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
மின்சார பேருந்து:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு அரசு மாநகர பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தினசரி 60 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இத்திட்டத்தால் பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் விரைவில் தமிழகத்திற்கு மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த மின்சார பேருந்து திட்டம் டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்து வருகிறது. மேலும் இந்த மின்சார பேருந்துகள் காற்று மாசுபாட்டையும் கட்டுப்படுத்துகிறது.
ஜனவரி 2ம் தேதி வரை ஊரடங்கு அமல் – பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூட தடை!
Exams Daily Mobile App Download
மேலும் தற்போது திமுக தலைமையிலான ஆட்சியில் முதல் கட்டமாக 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதற்கான ஒப்பந்தம் இன்று போடப்பட்டுள்ளதாவும் கூறியுள்ளார்.