இந்தியாவில் ஒரே நாளில் 53,256 பேருக்கு கொரோனா தொற்று – 1,422 பேர் பலி!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,256 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,422 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் சுமார் 4 மாத காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மக்களை மிக கடுமையாக தாக்கி வருகிறது. இதன் காரணமாக மாநிலங்கள் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக தற்போது கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் வெகுவாக குறைந்து உள்ளது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி – இன்று முதல் தொடக்கம்!
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 53,256 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,98,28,709 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 1,422 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,88,135 ஐ எட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து மேலும் 78,190 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் தற்போது வரை நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,88,44,199 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் 7,02,887 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நாட்டில் தற்போது வரை 28,00,36,898 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.