தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50000 – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

0
தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50000 - விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50000 - விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50000 – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

தமிழக அரசின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.50,000 உதவித்தொகை பெறலாம். இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்களுக்கு நிபந்தனைகளும் உண்டு இது குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பெண் குழந்தை பாதுகாப்பு:

தமிழகத்தில் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊக்கம் பெற்று அடுத்தடுத்து உயர்கல்வி கற்ற விரும்புகின்றனர். அதனால் பெண்கள் கல்வி பெறும் சதவீதமும் உயர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து பெண் குழந்தை பிறப்பதை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு சார்பாக பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய திட்டத்தின் மூலம் பெண் 50,000 வரை உதவித்தொகை பெறலாம்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் விடுமுறை!

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் மொத்தம் இரண்டு பிரிவுகள் உள்ளது. அதில் முதல் பிரிவில் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள குடும்பத்திற்கு ரூ.50,000 உதவித் தொகை கிடைக்கும் இரண்டாவது பிரிவின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்துக்கு ஒரு குழந்தைக்கு 25,000 என்ற அடிப்படையில் மொத்தம் 50,000 கிடைக்கும். 5 வயது வரை மாதம் ஒன்றுக்கு ரூ.150 என்ற அளவில் 18 வயது வரை தொகை கிடைக்கும். இத்திட்டத்தில் சேர விரும்பும் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். பெண் குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?

மேலும் அடுத்த நிபந்தனையாக பெற்றோரில் இருவரில் ஒருவர் தங்களது 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். ஒரே ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் இருக்க கூடாது. குறிப்பாக பெற்றோருக்கு ஆண் குழந்தைகள் இருக்கக் கூடாது. இத்திட்டத்தின் கீழ் தொகை பெற விரும்புவோர் மாவட்ட சமூக நல அதிகாரிகள், மாவட்ட திட்ட அதிகாரிகள், குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!