UPSC தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.50,000 நிதியுதவி – மாநில அரசு ஒப்புதல்!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) மூலமாக நடத்தப்படும் குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு உத்தரகாண்ட் அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
குடிமைப்பணி தேர்வுகள்:
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் முதல் நிலைத்தேர்வு (Prelims), முதன்மை தேர்வு (Mains), மற்றும் நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும். இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? கொரோனா பாதிப்பு எதிரொலி!
அதன் படி, உதய்மன் சத்ர யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மக்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணியியல் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோரில் முதல் 100 பேருக்கு தலா ரூ.50,000 வழங்க உத்தரகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான வரைவு அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டம் குடிமைப் பணியியல் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும். இந்த அறிவிப்பு காரணமாக உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் குடிமைப்பணி தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் காரணத்தால் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.